திருமண செய்தி : திவ்யா ஸ்பந்தனா கோபம் | மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி தரும் நந்திதா தாஸ் | 'லியோ 2, தி கோட் 2' - எதிர்காலத்தில் வருமா? | பவன் கல்யாண் நன்றிக்கு நன்றி தெரிவித்த சிம்பு | பிளாஷ்பேக் : வாய்ப்பளித்த எம்.ஜி.ஆர் ; வாழ்த்துப் பாடலால் நன்றி சொன்ன வாலி | டிரென்டிங் போட்டியில் 'மட்ட Vs மனசிலாயோ' | செப்டம்பர் 13, நாளை ஒரே ஒரு ரிலீஸ் | அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் படம் நிறைவு | பிளாஷ்பேக் : நான்கு காலகட்டங்களில் ரீமேக்கான படம் | சித்தர் வாக்குப்படி உருவான 'கடைசி உலகப் போர்' |
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் இன்று(ஆக., 22) அக்கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்து வைத்து அவரது கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன், அம்மா ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. விஜய்யும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் என்று வெளிவரும் தகவல்களை அவை உறுதி செய்வதாகவே உள்ளன.
கட்சிக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு விஜய் அங்கிருந்து நகர்ந்து சென்ற போது அவருடைய அம்மா விஜய்யின் கையைப் பிடித்து ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், அதை கண்டு கொள்ளாமல், அம்மாவை திரும்பிக் கூடப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு விஜய் நகரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உடனடியாகப் பரவியது.
தன்னுடைய அம்மாவை விஜய் மதிக்காமல் செல்வது சரியா என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேடையில் பேசும் போது மட்டும் அப்பா, அம்மாவுக்கு நன்றி சொல்லியிருந்தார் விஜய்.
விஜய் தீவிர அரசியலில் இறங்கும் போது அவரது குடும்பத்தினரைப் பற்றியப் பேச்சுக்களும் அவருக்கு எதிராகத் திரும்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.