திருமண செய்தி : திவ்யா ஸ்பந்தனா கோபம் | மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி தரும் நந்திதா தாஸ் | 'லியோ 2, தி கோட் 2' - எதிர்காலத்தில் வருமா? | பவன் கல்யாண் நன்றிக்கு நன்றி தெரிவித்த சிம்பு | பிளாஷ்பேக் : வாய்ப்பளித்த எம்.ஜி.ஆர் ; வாழ்த்துப் பாடலால் நன்றி சொன்ன வாலி | டிரென்டிங் போட்டியில் 'மட்ட Vs மனசிலாயோ' | செப்டம்பர் 13, நாளை ஒரே ஒரு ரிலீஸ் | அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் படம் நிறைவு | பிளாஷ்பேக் : நான்கு காலகட்டங்களில் ரீமேக்கான படம் | சித்தர் வாக்குப்படி உருவான 'கடைசி உலகப் போர்' |
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர். அதற்கு முன்பே அவர் 'வெப்பம்' படம் மூலம் அறிமுகமானவர். ஓடிடி வந்த பிறகு நானியின் பல தெலுங்குப் படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அவற்றிற்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. கடந்த சில வருடங்களில் நானி நடிக்கும் தெலுங்குப் படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியாகிறது.
அவர் தற்போது தெலுங்கில் நடித்துள்ள 'சரிபொத சனிவாரம்' படம் தமிழில் 'சூர்யாஸ் சாட்டர்டே' என்ற பெயரில் டப்பிங் ஆகி ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்துள்ள நானி, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஜே சூர்யா, படத்தின் கதை என்ன என்பதை சுருக்கமாகச் சொன்னார். அவர் சொன்ன கதை, டிரைலர் ஆகியவற்றைப் பார்த்த பின்பு அப்படம் விக்ரம் நடித்து வெளிவந்த 'தில், கந்தசாமி' ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் எனத் தெரிகிறது. மக்களின் பிரச்சனைகளை அறிந்து 'சேவல்' முகமூடியுடன் போய் அவற்றை விக்ரம் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் ‛கந்தசாமி' படத்தின் கதை. 'தில்' படத்தில் இன்ஸ்பெக்டரான ஆசிஷ் வித்யார்த்தியை போலீஸ் வேலைக்குத் தேர்வான விக்ரம் எதிர்ப்பதுதான் கதை. இரண்டு கதைகளையும் கலந்து, கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது. படம் வெளிவந்த பின் எது உண்மை என்பது தெரிந்துவிடும்.