அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. சரித்திரம் கலந்த பேன்டஸி படமான இப்படத்தின் வெளியீடு அக்டோபர் 10ம் தேதி என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதியே அறிவித்துவிட்டார்கள்.
இந்நிலையில் தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபட்டி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுகிறோம் என இன்று அறிவித்துள்ளார்கள்.
ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது. ரஜினி ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் அதற்குள் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். 'வேட்டையன்' முன் யாரும் போட்டியிட முடியாது என ரஜினி ரசிகர்களும், 'கங்குவா' படம் இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படம் என சூர்யா ரசிகர்களும் ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட்டு வருகிறார்கள்.