ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
'கன்னட கானகுயில்' என்று அந்த மாநில மக்களால் இப்போதும் போற்றப்படுகிறவர் அஸ்வத்தமா. அவர் நடித்தது 3 படங்கள்தான். 1935ல் ராஜா சந்திரசேகர் இயக்கி, குப்பி வீரண்ணாவின் தயாரிப்பில் வெளியான 'சாதரமே' என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.
1937ம் ஆண்டில் தியாகராஜ பாகவதரின் 'சிந்தாமணி' படத்தில் சிந்தாமணி பாத்திரத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் ஓராண்டு காலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. அதன்பிறகு 'சாந்த சக்குபாய்' படத்தில் நடித்தார். 3 படங்களுமே வெள்ளி விழா படங்கள். 3 படங்களிலும் டைட்டில் கேரக்டரில் நடித்தார். 3 படங்கள் நடித்த நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.
பெங்களூருவில் பிறந்த அஸ்வத்தமா 1934ம் ஆண்டில் முகம்மது பீரின் “மீனலோசனி நாடக சபாவில்” இணைந்து நாடக நடிகையாக அறிமுகமானார். பின்னர் பாடகி ஆனார். பிரபல ரிக்கார்டிங் நிறுவனங்கள் இவரது இசை தட்டுகளை போட்டி போட்டு வெளியிட்டன. சினிமாவில் அறிமுகமான பிறகு சினிமாவிலும் பாடினார்.
'சிந்தாமணி' படம் இலங்கையில் வெளியானபோது அதனை 100 முறைக்கு மேல் பார்த்த ரசிகர் ஒருவர், அஸ்வத்தமாவை நேரில் சந்திக்க கள்ளத் தோணி மூலம் இந்தியா வந்து, பின்னர் பெங்களூர் சென்று அவரை சந்திக்க முடியாமலேயே கடிதம் எழுதிவைத்து விட்டு பெங்களூரு தெருவில் செத்துக் கிடந்திருக்கிறார்.