சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
'கன்னட கானகுயில்' என்று அந்த மாநில மக்களால் இப்போதும் போற்றப்படுகிறவர் அஸ்வத்தமா. அவர் நடித்தது 3 படங்கள்தான். 1935ல் ராஜா சந்திரசேகர் இயக்கி, குப்பி வீரண்ணாவின் தயாரிப்பில் வெளியான 'சாதரமே' என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.
1937ம் ஆண்டில் தியாகராஜ பாகவதரின் 'சிந்தாமணி' படத்தில் சிந்தாமணி பாத்திரத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் ஓராண்டு காலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. அதன்பிறகு 'சாந்த சக்குபாய்' படத்தில் நடித்தார். 3 படங்களுமே வெள்ளி விழா படங்கள். 3 படங்களிலும் டைட்டில் கேரக்டரில் நடித்தார். 3 படங்கள் நடித்த நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.
பெங்களூருவில் பிறந்த அஸ்வத்தமா 1934ம் ஆண்டில் முகம்மது பீரின் “மீனலோசனி நாடக சபாவில்” இணைந்து நாடக நடிகையாக அறிமுகமானார். பின்னர் பாடகி ஆனார். பிரபல ரிக்கார்டிங் நிறுவனங்கள் இவரது இசை தட்டுகளை போட்டி போட்டு வெளியிட்டன. சினிமாவில் அறிமுகமான பிறகு சினிமாவிலும் பாடினார்.
'சிந்தாமணி' படம் இலங்கையில் வெளியானபோது அதனை 100 முறைக்கு மேல் பார்த்த ரசிகர் ஒருவர், அஸ்வத்தமாவை நேரில் சந்திக்க கள்ளத் தோணி மூலம் இந்தியா வந்து, பின்னர் பெங்களூர் சென்று அவரை சந்திக்க முடியாமலேயே கடிதம் எழுதிவைத்து விட்டு பெங்களூரு தெருவில் செத்துக் கிடந்திருக்கிறார்.