பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிக்கும் படத்தில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு, அதேநேரம் அதே இடம், அட்டி, பகிரி, பெட்டிக்கடை, தமிழ் குடிமகன் படங்களை தயாரித்தவர்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் படமாகி வருகிறது. சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கண்டுபிடி கண்டுபிடி, ஐ.பி.சி.376 ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பாராமன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, "அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் தீயவர்களை தட்டிகேட்கும் கதைகள் ஆயிரம் வந்துள்ளது. ஆனால் இந்த கதை முற்றிலும் மாறுபட்டது; முழுவதும் வேறுபட்டது. அநியாயத்தை இவன் எதிர்கொள்வதே சிறப்பாக மட்டுமல்ல மக்களின் கைதட்டலோடு காட்சிகள் நகரும்.
திரில்லும், திகிலும் மட்டுமல்ல மிரட்டலும் சேர்ந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். மதுரை வட்டார வழக்கில் "நறுக்"கான வசனம் எழுதி இருக்கிறேன். சமுத்திரகனி கதையை நான்கு மணிநேரத்தில் படித்துவிட்டு பாராட்டினார். இப்படத்தை டிசம்பருக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.




