ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
'கங்குவா'படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. 'நவாநகர் பேலஸ்' என்ற இடத்தில் சண்டைகாட்சி படமாக்கப்பட்டு வந்தது. இதில் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் சூர்யாவை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் படத்தில் நடித்த சண்டை கலைஞர்கள், துணை நடிகர்கள் ஊட்டியில் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 113 ரஷ்ய நாட்டு துணை நடிகர்கள், சண்டை கலைஞர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரே ஓட்டலில் தங்கி இருந்த இவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்ததும், ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். இதில் அத்தனை பேரும் டூரிஸ்ட் விசாவில் வந்திருப்பதும், இங்கு பணியாற்ற அதாவது சினிமாவில் நடிக்க உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் அனைவரையும் நீலகிரி மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் சென்றுவிட்டால் படத்தின் தொடர்ச்சி (கன்டினிவியூட்டி) பாதிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இந்திய மற்றும் ரஷ்ய தூதரங்கள் மூலம் உரிய அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.