சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'கோட்'. விஜய் அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜய்யுடன் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அர்ஜூன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் இசை அமைத்துள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் 5ம் தேதி படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தின் கதை பற்றி வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தின் உளவு அமைப்பான 'ரா' வின் துணை அமைப்பு 'சாட்ஸ்', அதாவது சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு படை. இந்த அமைப்பு ரா அமைப்போடு இணைந்து பணியாற்றும்.
இந்த அமைப்பில் பணியாற்றிய ஒரு குழு ஒரு காலத்தில் செய்த ஒரு விஷயம் தற்போது அவர்களுக்கு பிரச்னையாக வந்து நிற்கிறது. அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. ஒரு பெஸ்டிவல் மூடில் படம் இருக்கும், வழக்கமான விஜய்யை வேறு மாதிரி ரசித்து பார்க்கிற மாதிரி இருக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார் வெங்கட் பிரபு.




