சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'கோட்'. விஜய் அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜய்யுடன் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அர்ஜூன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் இசை அமைத்துள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் 5ம் தேதி படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தின் கதை பற்றி வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தின் உளவு அமைப்பான 'ரா' வின் துணை அமைப்பு 'சாட்ஸ்', அதாவது சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு படை. இந்த அமைப்பு ரா அமைப்போடு இணைந்து பணியாற்றும்.
இந்த அமைப்பில் பணியாற்றிய ஒரு குழு ஒரு காலத்தில் செய்த ஒரு விஷயம் தற்போது அவர்களுக்கு பிரச்னையாக வந்து நிற்கிறது. அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. ஒரு பெஸ்டிவல் மூடில் படம் இருக்கும், வழக்கமான விஜய்யை வேறு மாதிரி ரசித்து பார்க்கிற மாதிரி இருக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார் வெங்கட் பிரபு.