பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியில் பிரபலமாகி விட்டார் நடிகை ராஷ்மிகா. தற்போது தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் குபேரா, ஹிந்தியில் ஜாவா, சிக்கந்தர் போன்ற படங்களில் நடிக்த்து வருகிறார். இவர் கூறுகையில், ‛‛சினிமாவிற்கு ஏற்ற முகம் இல்லை என கூறி ஆரம்பத்தில் பலரும் என்னை நிராகரித்தார்கள். ஆடிஷன் போய்விட்டு வீட்டிற்கு வந்தாலே கண்ணீருடன் தான் வருவேன். கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்தேன். கஷ்டப்பட்டு ஒரு படத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. மூன்று மாதங்கள் பயிற்சி நடந்தது. பின்னர் அந்த படமும் நின்றுவிட்டது. பிறகு சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை'' என்கிறார்.