இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

நடிகர் சூரி நகைச்சுவை நடிகரில் இருந்து கதையின் நாயகனாக மாறியுள்ளார். விடுதலை, கருடன் என இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூரியின் கைவசமாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2 ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் சூரி முதல்முறையாக வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் தொடரில் சூரி கதை, எழுதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் மதுரையில் நடைபெறும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.




