பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவு, பல நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன் பல மக்கள் வீட்டிலிருந்து வாழ்வாதாரம் இழக்கவும் காரணமாகவும் அமைந்துவிட்டது. பேரிடர் மீட்புக் குழுவும் இந்திய ராணுவ வீரர்களும் இணைந்து மீட்பு பணியிலும் நிவாரணப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். அந்த சமயத்தில் இந்திய ராணுவத்தின் கவுரவமான லெப்டினென்ட் கர்னல் பொறுப்பு வகிக்கும் மோகன்லால் ராணுவ சீருடையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
மேலும் தனது அறக்கட்டளை மூலமாக சுமார் மூன்று கோடி அளவிலான நிவாரண உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த யு-டியூப் சேனல் நடத்தி வரும் அஜு அலெக்ஸ் என்பவர் மோகன்லால் இப்படி ராணுவ சீருடை அணிந்து ராணுவ வீரர்களுடன் சேர்ந்து நிலச்சரிவு பாதித்த இடங்களை பார்வையிட்டது குறித்து கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் நடிகர் சித்திக் போலீசில் அளித்த புகாரின் பேரில் அஜு அலெக்ஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.