இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை | 72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு உயில் எழுதி வைத்த 62 வயது ரசிகை | மீண்டும் ஒரு நாய் படம் |
இளம் அறிமுக நடிகைகளுக்கு போட்டியாக இப்போதும் களத்தில் நிற்கிறார் திரிஷா. விடாமுயற்சி, தக் லைப், மலையாளத்தில் ராம், ஐடன்டட்டி, தெலுங்கில் 'விஸ்வம்பரா' என பிசியாக இருக்கிறார். இதற்கு இடையில் திரிஷா நடித்துள்ள வெப் தொடர் 'பிருந்தா'. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த தொடர் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இன்று(ஆக., 2) சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் திரிஷா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்தது பெரும் ஈர்ப்பாக இருந்தது. எந்தவொரு கதாபாத்திரமும் ஒரு சவாலே. ஆனால், இயக்குநரிடம் தெளிவு இருந்ததால் அனைத்து சிறப்பாகவே மாறியது. பிருந்தாவின் உடல் மொழி மற்றும் கேரக்டர் ஸ்கெட்ச் பற்றி விரிவாக விவாதித்தோம். அதன்பிறகு ஒத்திகை நடத்தி அதன் பிறகே நடித்தேன்.
இதற்கு முன்பு பல ஓடிடி வாய்ப்புகள் வந்தபோதும் அவற்றில் எனது கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் அதனை நான் ஒப்புக் கொள்ளவில்லை. மென்மையான கேரக்டர்களில் என்னை பார்த்து ரசித்த ரசிகர்கள் எனது போலீஸ் கேரக்டரை ஏற்றுக் கொள்ளவார்கள் என்று நம்புகிறேன். அதற்காக கடின உழைப்பையும், மெனக்கெடலையும் கொடுத்திருக்கிறேன்” என்கிறார் திரிஷா.
இந்த தொடரை சூர்யா மனோஜ் வாங்கலா எழுதி இயக்கியுள்ளார். சக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். திரிஷாவுடன் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.