காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

இளம் அறிமுக நடிகைகளுக்கு போட்டியாக இப்போதும் களத்தில் நிற்கிறார் திரிஷா. விடாமுயற்சி, தக் லைப், மலையாளத்தில் ராம், ஐடன்டட்டி, தெலுங்கில் 'விஸ்வம்பரா' என பிசியாக இருக்கிறார். இதற்கு இடையில் திரிஷா நடித்துள்ள வெப் தொடர் 'பிருந்தா'. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த தொடர் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இன்று(ஆக., 2) சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் திரிஷா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்தது பெரும் ஈர்ப்பாக இருந்தது. எந்தவொரு கதாபாத்திரமும் ஒரு சவாலே. ஆனால், இயக்குநரிடம் தெளிவு இருந்ததால் அனைத்து சிறப்பாகவே மாறியது. பிருந்தாவின் உடல் மொழி மற்றும் கேரக்டர் ஸ்கெட்ச் பற்றி விரிவாக விவாதித்தோம். அதன்பிறகு ஒத்திகை நடத்தி அதன் பிறகே நடித்தேன்.
இதற்கு முன்பு பல ஓடிடி வாய்ப்புகள் வந்தபோதும் அவற்றில் எனது கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் அதனை நான் ஒப்புக் கொள்ளவில்லை. மென்மையான கேரக்டர்களில் என்னை பார்த்து ரசித்த ரசிகர்கள் எனது போலீஸ் கேரக்டரை ஏற்றுக் கொள்ளவார்கள் என்று நம்புகிறேன். அதற்காக கடின உழைப்பையும், மெனக்கெடலையும் கொடுத்திருக்கிறேன்” என்கிறார் திரிஷா.
இந்த தொடரை சூர்யா மனோஜ் வாங்கலா எழுதி இயக்கியுள்ளார். சக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். திரிஷாவுடன் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.




