காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பிரேமி. 'உதிரிபூக்கள்' படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த பிரேமியை காதலித்தார் அந்த படத்தின் இயக்குனர் மகேந்திரன். அவர் ஏற்கெனவே திருமணமாவர் என்பதை அறிந்த பிறகும் அவர் மீதிருந்த உயர்ந்த மதிப்பின் காரணமாக காதலை தொடர்ந்தார் பிரேமி. அதன்பிறகு மகேந்திரன் இயக்கிய படங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு கேரக்டரில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் மகேந்திரன் படம் இயக்குவதை நிறுத்தியதும் அவருக்கு பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனால் இரு குடும்பங்களை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தன்னோடு 7 வருடங்கள் வாழ்ந்து ஒரு குழந்தைக்கும் தாயான பிரேமியை கைவிட்டார் மகேந்திரன். அதன்பிறகு பிரேமி தனது உறவினர்கள் ஆதரவில் வாழ்ந்து மீண்டும் படங்களில் நடித்து தனது மகனை வளர்த்தெடுத்தார்.
மகேந்திரன் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது பல வருடங்களுக்கு பிறகு தனது மகனுடன் மகேந்திரனை சந்தித்தார் பிரேமி. தனது கடைசி காலத்தில் பிரேமியை பிரிந்ததை நினைத்து மகேந்திரன் நிறைய வருந்தியதாக சொல்வார்கள்.
இந்த தகவலை பிரேமியை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.




