சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

நடிகர்களின் சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்னை காரணமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்குமான மோதல் அதிகரித்து வருகிறது. முன்பணம் வாங்கிக் கொண்டு தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் 16ம் தேதி முதல் புதிய படங்கள் தொடங்கப்படாது என்றும், நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து முழு வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகவும் திரைப்பட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம், தனுஷ் மீது இதுவரை எந்த புகாரும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. அதோடு தன்னிச்சையாக முடிவெடுப்பதா என்றும் கேட்டிருந்தது.
இந்த நிலையில் தயாரிப்பளார் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தனுஷ் மீது எந்த புகாரும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே தயாரிப்பாளர் சங்க பொதுகுழுவில் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் 5 நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் நடிகர் சங்கம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் சங்க உறுப்பினர்கள் நலன் காக்க நாங்களும் சில முடிவுகள் எடுக்க வேண்டியது வந்தது. நடிகர் சங்கம் தங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுப்பதை போலத்தான் எங்கள் உறுப்பினர்களின் நலன் காக்க ஏற்கனவே அறிவித்த நவ., 1 முதல் சினிமா ஸ்டிரைக் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளோம். இதற்கு நடிகர் சங்கம் தகுந்த ஒத்துழைப்பு தரும் என்ற நம்புகிறோம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.