ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கிய லைகர் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து ஐ ஸ்மார்ட் என்கிற வெற்றி படத்தை கொடுத்திருந்த பூரி ஜெகன்நாத் அதன் இரண்டாம் பாகமாக டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக காவ்யா தாபர் நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்ற ஸ்டெப்பமார் என்கிற முதல் பாடல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாடலாக மார் முந்தா சோட் சிந்தா என்கிற பாடல் வெளியானது. ஆனால் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் தெலுங்கானாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் அடிக்கடி பேசும் ஒரு முக்கிய வசனத்தை கிண்டல் அடிக்கும் விதமாக இடம் பெற்றுள்ளதாக தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர் ரஜிதா ரெட்டி என்பவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் படக்குழுவினருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.