மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'மகாராஜா'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து முதல் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.
படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் விஜய், அதன் இயக்குனர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் நித்திலன், “டியர் விஜய் அண்ணா, இந்த அறிவூட்டும் சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். 'மகாராஜா'வைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னை பெருமைப்படுத்துகின்றன. அது எனக்கு ஒரு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். லவ் யூ ணா. எனது தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் ஆகியோருக்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் மேனேஜராக அவரது வலதுகரமாக இருக்கும் ஜெகதீஷ் 'மகாராஜா' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.