லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு | 15 ஆயிரம் கோடி குடும்ப சொத்தை இழக்கிறார் சைப் அலிகான் | காசோலை மோசடி : ராம் கோபால் வர்மாவுக்கு 3 மாதம் சிறை தண்டனை | ஜெயச்சந்திரன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா? : விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'மகாராஜா'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து முதல் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.
படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் விஜய், அதன் இயக்குனர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் நித்திலன், “டியர் விஜய் அண்ணா, இந்த அறிவூட்டும் சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். 'மகாராஜா'வைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னை பெருமைப்படுத்துகின்றன. அது எனக்கு ஒரு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். லவ் யூ ணா. எனது தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் ஆகியோருக்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் மேனேஜராக அவரது வலதுகரமாக இருக்கும் ஜெகதீஷ் 'மகாராஜா' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.