தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி |

ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மெண்ட் சார்பில் ராம் மணிகண்டன் தயாரித்துள்ள படம் 'சதுர்'. அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ், தாமோதரன், செல்லா, 'ஜீவா' ரவி, சூர்யா, அர்னவ் ஹரிஜா, பிரதீப் அரி, கிரிஷ் பாலா, ஜெகன் கிரிஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். அகஸ்டின் பிரபு எழுதி இயக்கியுள்ளதோடு விஎப்எக்ஸ் பணியும் மேற்கொண்டுள்ளார். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழ் மன்னர் ஒருவரால் கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட ஒரு புதையலை தேடி இன்றைய இளைஞர்கள் செல்வது மாதிரியான கதை.
படம் பற்றி இயக்குனர் அகஸ்டின் பிரபு கூறும்போது “இப்படத்தில் 1,250 விஎப்எக்ஸ் ஷாட்டுகள் இருக்கிறது. தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லி, தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்றேன். பிறகு பைலட் படத்தை உருவாக்கிக் காட்டினேன். உடனே அவர் என்னை முழுமையாக நம்பினார்.
கடலுக்குள் நடக்கும் காட்சி மற்றும் கார்சேஸ், பிளைட் பைட், ஹிஸ்டாரிக்கல் காட்சிகள் உள்பட பிரமிக்கத்தக்க காட்சிகள் நிறைய இருக்கிறது. சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு கதை தொடங்குகிறது. 1945, 1967 ஆகிய காலக்கட்டங்களில் நடந்து, இறுதியில் இன்றைய வருடத்தில் முடிகிறது. அனைத்து ரசிகர்களுக்கும் 'சதுர்' படம் புதிய அனுபவமாக இருக்கும். அடுத்தமாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.