இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெளிமாநிலங்களில் இருந்து திடீர் திடீரென கவர்ச்சி நடிகைகள் வருவது வழக்கம். லேட்டஸ்டாக சன்னி லியோனை சொல்லலாம். அந்த வரிசையில் மும்பையில் இருந்து வந்த கவர்ச்சி நடிகை ரதி தேவி. சின்ன சின்ன படங்களில் கவர்ச்சியாக நடித்தார். ஆர்.கே.சண்முகம் இயக்கத்தில் ஜெய் கணேஷிற்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து 1979ம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் 'பாப்பாத்தி'. இது மும்பை சிவப்பு விளக்கு பகுதிக்கு கடத்தப்பட்ட ஒரு பெண், பின்னர் நடிகையாக ஜெயித்த கதை. இது ரதி தேவியின் உண்மை கதை என்றும் அப்போது பேசப்பட்டது.
1981ம் ஆண்டு ஆர்.பட்டாபிராமன் இயக்கத்தில் அர்ஜூன், ரவீந்தருடன் 'அந்த உறவுக்கு சாட்சி' என்ற படத்தில் நடித்திருந்தார். இதே ஆண்டு விஜயசாரதியின் இயக்கத்தில் ராஜேசுடன் 'வெளிச்சத்துக்கு வாங்க' என்ற படத்திலும் நடித்திருந்தார். 1984ம் ஆண்டு ஏ.சண்முகம் இயக்கத்தில் சிவச்சந்திரன் கதாநாயகனாகவும், இவர் கதாநாயகியாகவும் நடித்த படம் 'அந்த ஜூன் 16-ஆம் நாள்' திகில் கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகி இருந்தது. இதில் ரதி தேவி ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன்பிறகும் ஒரு சில படங்களில் நடித்த ரதி தேவி வாய்ப்புகள் குறையவே மும்பைக்கே திரும்பிவிட்டர். பின்னர் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை.