டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கன்னட திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் ரக்சித் ஷெட்டி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாய்க்கும் மனிதனுக்குமான அன்பை மையப்படுத்தி வெளியான ‛சார்லி 777' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர். இன்னும் சொல்லப்போனால் நடிகை ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று கடைசி நேரத்தில் நின்று போனது சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் தற்போது படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் ‛பேச்சுலர் பார்ட்டி' என்கிற படம் வெளியானது. இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜுன் ராமு என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்ஆர்பி மியூசிக் என்கிற நிறுவனம் புகார் அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து காப்பிரைட் உரிமை சட்டத்தின்படி பெங்களூரு போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.