25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
நடிகர் மம்முட்டி தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது சொந்த பட நிறுவனமே இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருக்கும் மகாதேவ் என்கிற சிறுவன் அந்தப் படத்தின் பூஜையன்று படப்பிடிப்பு தளத்தில் துறுதுறுவென்று சுற்றியுள்ளான். அவன் மம்முட்டியின் ரசிகன் என்றும் மம்முட்டி நடித்து கடந்த வருடம் வெளியான கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தை பலமுறை திரும்பத் திரும்ப பார்க்கிறான் என்கிற தகவலும் மம்முட்டியின் காதுகளுக்கு எட்டியது.
அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் சிறுவனின் பிறந்தநாளும் வரப்போகிறது என்பதை கேள்விப்பட்ட மம்முட்டி அவனது பிறந்த நாளன்று ஒரு லம்பார்கினி கார் பொம்மையை பரிசாக வாங்கிக்கொண்டு அந்த சிறுவனின் வீட்டிற்கே நேராக சென்றார். மம்முட்டியின் வருகையை எதிர்பாராத அந்த சிறுவனும் அவனது பெற்றோரும் மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அவனுக்கு பிறந்தநாள் பரிசளித்து வாழ்த்தி விட்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினார் மம்முட்டி.