கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா, 'பலே பாண்டியா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் உள்பட பல படங்களில் நடித்தார். அவர் முதன் முறையாக சோலோ ஹீரோயினாக நடிக்கும் படம் 'றெக்கை முளைத்தேன்'. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தயாரித்து, இயக்குகிறார். பின்னணி இசையை தரண்குமார் அமைக்க, பாடல்களுக்கு தீசன் இசையமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது “இது நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம். எனது முதல் தயாரிப்பு என்பதால் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன். படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்” என்றார்.