இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் |
ரேணுகா சுவாமி என்ற ரசிகரை படுகொலை செய்த வழக்கில், முன்னனி கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காதலி நடிகை பவித்ரா கவுடாவை தொடர்ந்து சமூக வலைதளம் மூலம் டார்ச்சர் செய்து வந்ததால் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கும், விசாரணையும் நடந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து பேட்டி அளித்த போலீஸ் கமிஷனர், பவித்ரா கவுடாவை தர்ஷனின் மனைவி என்று குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி பெங்களூரு மாநகர காவல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளர். அதில், ''செய்தியாளர் சந்திப்பில் நடிகை பவித்ரா கவுடாவை, தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டீர்கள். அது தவறானது. தர்ஷனின் சட்டப்பூர்வமான மனைவி நான் மட்டுமே என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீங்கள் தவறாக குறிப்பிட்டதை தொடர்ந்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வராவும், ஊடகங்களும் பவித்ரா கவுடாவை மனைவி என்றே கூறி வருகின்றனர். பவித்ரா கவுடாவுக்கு சஞ்சய் சிங் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகள் இருக்கிறார்.
இந்த உண்மை போலீஸாரின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். பவித்ரா கவுடாவும், தர்ஷனும் கணவன் மனைவி அல்ல. அவர் எனது கணவரின் தோழி மட்டுமே. அதுவும் தொழில் சார்ந்த நட்பு மட்டுமே அவர்களுக்குள் இருந்தது'' என எழுதியுள்ளார்.