100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் |

இயக்குனர் திருச்செல்வம் நீண்ட இடைவேளைக்கு பின் ‛எதிர்நீச்சல்' தொடரின் மூலம் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார். அந்த தொடருக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாரத வகையில் அந்த சீரியல் நிறைவுபெற்றது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் திருச்செல்வத்திடம் எதிர்நீச்சல் பார்ட் 2 குறித்து அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எல்லோருமே எதிர்நீச்சல்-2 எதிர்பார்க்கிறார்கள். இனி அதே பெயரை வைப்பதை விட அந்த கதையோடு பொருந்துகிற மாதிரி இன்னொரு கதை உருவாகியிருக்கிறது. அதற்காக நான் பல ஊர்களில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீரியலுக்கான ஆயத்த பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதிர்நீச்சல் வீட்டுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் புது சீரியலில் அந்த வீடும் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வீட்டுக்கு இப்போதும் நான் வாடகை கொடுத்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து திருச்செல்வத்தின் அடுத்த சீரியலின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.




