விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! |
இயக்குனர் திருச்செல்வம் நீண்ட இடைவேளைக்கு பின் ‛எதிர்நீச்சல்' தொடரின் மூலம் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார். அந்த தொடருக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாரத வகையில் அந்த சீரியல் நிறைவுபெற்றது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் திருச்செல்வத்திடம் எதிர்நீச்சல் பார்ட் 2 குறித்து அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எல்லோருமே எதிர்நீச்சல்-2 எதிர்பார்க்கிறார்கள். இனி அதே பெயரை வைப்பதை விட அந்த கதையோடு பொருந்துகிற மாதிரி இன்னொரு கதை உருவாகியிருக்கிறது. அதற்காக நான் பல ஊர்களில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீரியலுக்கான ஆயத்த பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதிர்நீச்சல் வீட்டுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் புது சீரியலில் அந்த வீடும் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வீட்டுக்கு இப்போதும் நான் வாடகை கொடுத்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து திருச்செல்வத்தின் அடுத்த சீரியலின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.