திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கோட்'. செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் வெளிவர உள்ள முதல் படம் இது. விஜய்யின் தற்போதைய அரசியல் நகர்வு திமுகவுக்கு எதிராக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு ஆளும் அரசை குறை கூறியிருந்தார் விஜய்.
இந்நிலையில் 'தி கோட்' படத்தின் தமிழக உரிமையை ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நெருக்கமான ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்தான் வாங்கியிருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல். சுமார் 70 கோடி அளவிற்கு தமிழக உரிமை விலை போயிருக்கிறது.
இதற்கு முன்பு சந்தானம் நடிப்பில் வந்த 'வடக்குபட்டி ராமசாமி' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வாங்கியிருந்தது. ஆனால், அந்தப் படத்தை ரெட்ஜெயன்ட் வெளியிடுவதற்கு கட்சியினரிடம் எதிர்ப்பு எழுந்தது. அதன்பின் அவர்களது பெயர் நீக்கப்பட்டு ரோமியோ பிக்சர்ஸ் படத்தை வெளியிடுவதாக அறிவித்தார்கள்.
தனது 'தி கோட்' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் நெருங்கிய நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியிருப்பது விஜய்க்குத் தெரியுமா, தெரியாதா என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.