விஸ்வரூபம் மற்றும் விக்ரம் படங்களில் மகாபாரத பாதிப்பு உண்டு : கமல் புதிய தகவல் | கல்கியில் வரவேற்பை பெற்ற பஹத் பாசில் ஆவேசம் வசனம் | குருவாயூர் கோவிலில் இனிதே நடந்த மீரா நந்தன் திருமணம் | ஜீத்து ஜோசப் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட மோகன்லால் | மாஸ்க் படத்தில் கவினுக்கு ஜோடியாகும் ருஹானி சர்மா | லாரன்ஸிற்கு வில்லனாக பஹத் பாசில், எஸ்.ஜே.சூர்யா | வரலட்சுமி திருமணம் : பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் தந்த சரத்குமார் | அருள்நிதி புதிய பட அப்டேட் | எல்.ஐ.சி படத்தை விட்டு விலகும் பிரபலம்...? | மலேசிய பிரதமரை சந்தித்த கமல் |
ஹிந்தி இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருந்த ஹிந்திப் படமான 'கர்ணா' படம் டிராப் செய்யப்பட்டதாக கடந்த சில தினங்களாக பாலிவுட்டில் தகவல் பரவியது.
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து அப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். இப்படத்தில் திரவுபதியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
படத்தில் எண்ணற்ற விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளதால் முதலில் போட்ட பட்ஜெட்டை விட தற்போது பட்ஜெட் எகிறிவிட்டதாம். சுமார் 500 கோடிக்கும் செலவாகும் என தெரிய வந்ததால் படத்தை டிராப் செய்ததற்காகக் காரணமாகச் சொன்னார்கள்.
ஆனால், படத்தை டிராப் செய்யவில்லை, தற்போதைக்குத் தள்ளி வைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தின் கடைசியில் படத்தை ஆரம்பிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஹிந்திப் படங்களில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக உயர வேண்டுமென்றுதான் சென்னையை விட்டு மும்பை சென்று சூர்யா செட்டில் ஆனார்.