பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
நடிகர் பிரித்விராஜ் பிஸியான நடிகராக மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் மூலமாக வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய அவர், அதன்பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா தேவ் என்பவர் தற்போது குஜராத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இவர் வேறு யாருமல்ல.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் பிரித்விராஜ் நடித்திருந்த வரதராஜ மன்னர் என்கிற கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்தில் நடித்தவர் தான். அந்த படத்தில் இவரது நடிப்பு பிடித்து போய்விட தான் இயக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்து மலையாள திரையுலகிற்கு அவரை அழைத்து வந்து விட்டார் பிரித்விராஜ்.