மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பிரபல சின்னத்திரை நடிகையான ஹரிப்பிரியா நீண்டநாள் இடைவேளைக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனித்து வாழ்ந்து வரும் ஹரிப்பிரியாவுக்கு எதிர்நீச்சல் தொடர் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. இந்நிலையில், அந்த தொடர் அண்மையில் முடிவுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து ஹரிப்பிரியா என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் சட்டென பரதநாட்டியத்திற்கான நடனப்பள்ளி ஒன்றை துவங்கியுள்ளார். காளிகல்பா என்ற இவரது நடனப்பள்ளியில் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடனம் சொல்லித்தரப்படும் என அறிவித்துள்ளார். மேலும் நடனப்பள்ளி திறப்பதை தனது நீண்டநாள் கனவு என பதிவிட்டுள்ள ஹரிப்பிரியாவுக்கு ரசிகர்கள், சக நண்பர்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




