ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சின்னத்திரை நடிகர் வசந்த் வசி அக்னி நட்சத்திரம், பாரதிதாசன் காலனி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ளார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியிட்டு வந்த நிலையில் கடந்த வாரம் எலிமேனேட் ஆகிவிட்டார். இதனையடுத்து ஊடகங்கள் இவரை வட்டமிட்டு பேட்டியெடுத்து வருகின்றனர். அவ்வாறாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'நான் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு முறையும் போராடி நூலிழையில் தோற்றுவிடுகிறேன். இது என்னுடைய வாழ்வில் பலமுறை நடந்திருக்கிறது. படங்களில் நடிக்க வேண்டும் பல முயற்சிகள் எடுத்திருக்கிறேன்.
வேலையில்லா பட்டதாரி 2வில் நான் தான் பாலாஜி மோகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. டயலாக் பேப்பரெல்லாம் வாங்கி மனப்பாடம் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் சென்றுவிட்டேன். ஆனால், கடைசி நேரத்தில் சவுந்தர்யா மேடம் என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னார். நானும் சென்றேன். அவருக்கு நான் சின்ன பையனாக இருப்பதாக தோன்றியிருக்கிறது. என்னை மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அன்று ஷூட்டிங் நடக்கவில்லை. நான் வீட்டிற்கு வந்து அழுதேன். கடைசியில் படம் ரிலீஸான போது பார்த்தால் பாலாஜி மோகன் நான் மனப்பாடம் செய்த அதே டயலாக்கை பேசினார். அதை பார்க்கு போது கஷ்டமாக இருந்தது' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.