இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் |

பிரபல சின்னத்திரை நடிகையான ஹரிப்பிரியா நீண்டநாள் இடைவேளைக்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனித்து வாழ்ந்து வரும் ஹரிப்பிரியாவுக்கு எதிர்நீச்சல் தொடர் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. இந்நிலையில், அந்த தொடர் அண்மையில் முடிவுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து ஹரிப்பிரியா என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் சட்டென பரதநாட்டியத்திற்கான நடனப்பள்ளி ஒன்றை துவங்கியுள்ளார். காளிகல்பா என்ற இவரது நடனப்பள்ளியில் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடனம் சொல்லித்தரப்படும் என அறிவித்துள்ளார். மேலும் நடனப்பள்ளி திறப்பதை தனது நீண்டநாள் கனவு என பதிவிட்டுள்ள ஹரிப்பிரியாவுக்கு ரசிகர்கள், சக நண்பர்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




