பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியா, அந்த தொடரில் வரும் வில்லனை போல நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கு ஆயிரம் குணசேகரன்கள் வருவார்கள் என்றும், அவர்களை கண்டு பயந்து ஓடாமல் போராட வேண்டும் என்றும் அறிவுரை செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகை ஹரிப்ரியா தொலைக்காட்சி சீரியல்கள் நடிப்பதுடன் சிறப்பு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது 'எதிர்நீச்சல்' தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் காமெடி கலந்த நடிப்புடன் பட்டையை கிளப்பி வருகிறார். இதற்கு முன்பே இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் நந்தினி கதாபாத்திரம் இவருக்கு பெரிய புகழை பெற்று தந்துள்ளது. கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற ஹரிப்ரியா தற்போது தனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'குணசேகரன் மாதிரி ஒருத்தர் உங்கள் வாழ்க்கையில் இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக ஆசிர்வதிக்கப்பட்டவர். வெளியில் நம்மைச் சுற்றி ஆயிரம் குணசேகரன்களும், கதிர்வேல்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் சமாளித்து தான் ஒவ்வொரு நாளையும் நாம் கடந்து செல்ல வேண்டும். குணசேகரன் போன்றோர்களை பார்த்து பயந்து ஓடக்கூடாது. பாரதியார் சொன்னது போல் ரெளத்திரம் பழக வேண்டும். யாருக்காகவும் நம் உரிமையை விட்டுக்கொடுக்ககூடாது. எதிர்த்து போராட வேண்டும்' என்று அறிவுரை செய்துள்ளார்.