லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமான ரோஷினி ஹரிப்பிரியன் தமிழில் பல ஹிட் திரைப்பட வாய்ப்புகளை தவறவிட்டார். அதில் ஒன்று தான் ஜெய்பீம். இதனையடுத்து சீரியலை உதறி தள்ளிவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது மலையாள நடிகை ஷெல்லியுடன் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஷெல்லியின் தோளில் சாய்ந்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ள ரோஷினி அந்த புகைப்படத்திற்கு அம்மா, மகள், தேநீர் என ஹேஷ்டேக் போட்டிருக்கிறார். இதிலிருந்து இந்த திரைப்படமானது அம்மாவிற்கும் மகளுக்கும் இடையேயான எமோஷனல் டிராமாவாக இருக்கலாம் என்பது தெரிய வருகிறது. இதனையடுத்து ரோஷினியின் சினிமா கேரியர் சக்ஸஸ் ஆக ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.