2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமான ரோஷினி ஹரிப்பிரியன் தமிழில் பல ஹிட் திரைப்பட வாய்ப்புகளை தவறவிட்டார். அதில் ஒன்று தான் ஜெய்பீம். இதனையடுத்து சீரியலை உதறி தள்ளிவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது மலையாள நடிகை ஷெல்லியுடன் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஷெல்லியின் தோளில் சாய்ந்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ள ரோஷினி அந்த புகைப்படத்திற்கு அம்மா, மகள், தேநீர் என ஹேஷ்டேக் போட்டிருக்கிறார். இதிலிருந்து இந்த திரைப்படமானது அம்மாவிற்கும் மகளுக்கும் இடையேயான எமோஷனல் டிராமாவாக இருக்கலாம் என்பது தெரிய வருகிறது. இதனையடுத்து ரோஷினியின் சினிமா கேரியர் சக்ஸஸ் ஆக ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.