புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமான ரோஷினி ஹரிப்பிரியன் தமிழில் பல ஹிட் திரைப்பட வாய்ப்புகளை தவறவிட்டார். அதில் ஒன்று தான் ஜெய்பீம். இதனையடுத்து சீரியலை உதறி தள்ளிவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது மலையாள நடிகை ஷெல்லியுடன் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஷெல்லியின் தோளில் சாய்ந்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ள ரோஷினி அந்த புகைப்படத்திற்கு அம்மா, மகள், தேநீர் என ஹேஷ்டேக் போட்டிருக்கிறார். இதிலிருந்து இந்த திரைப்படமானது அம்மாவிற்கும் மகளுக்கும் இடையேயான எமோஷனல் டிராமாவாக இருக்கலாம் என்பது தெரிய வருகிறது. இதனையடுத்து ரோஷினியின் சினிமா கேரியர் சக்ஸஸ் ஆக ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.