பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கிரிஷ், சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்பெஷல் ரவுண்டுடன் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், கடந்த வாரம் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்காக ஒரு பாடலை தேர்வு செய்து பாடினார்கள்.
இந்நிலையில்,போட்டியாளர் ஸ்வேதா தனது அப்பாவிற்காக டெடிகேட் செய்து 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலை பாடினார். அப்போது அவர் தனது தந்தைக்காக எழுதியிருந்த கடிதத்தை மேடையில் படித்தார். அந்த கடிதத்தில் 'எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனால், உங்களுக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதா? என்று தெரியவில்லை. எனக்கு உங்களிடமிருந்து முத்தமும் அரவணைப்பும் வேண்டும்' என்று எழுதியிருந்தார்.
இதைபார்த்து உணர்ச்சிவசப்பட்ட ஸ்வேதாவின் தந்தை தன் மகள் தன் பாசத்திற்காக இவ்வளவு ஏங்கி தவிக்கிறாளா? என்று வருத்தப்பட்டு உடனடியாக மேடையிலேயே ஸ்வேதாவின் காலிலேயே விழுந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க செய்தது. அதேசமயம் ஸ்வேதாவின் நீண்ட நாள் ஆசையான தந்தையின் முத்தமும் அவருக்கு கிடைத்துவிட்டது.




