ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
ஹிந்தித் திரையுலகத்தில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பூஜா என்டர்டெயின்மென்ட். அந்நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. ஆனால், அவர்கள் கடைசியாகத் தயாரித்த இரண்டு திரைப்படங்கள் பெரும் நஷ்டத்தைக் கொடுத்தன.
டைகர் ஷெராப், அமிதாப்பச்சன், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த படம் 'கண்பத்'. சுமார் 190 கோடி செலவில் தயாரான இந்தப் படம் வெறும் 13 கோடியை மட்டுமே வசூலித்தது. அடுத்து அக்ஷய்குமார், டைகர் ஷெராப், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்து ஏப்ரலில் வெளிவந்த படம் 'படே மியான் சோட்டோ மியான்'. சுமார் 350 கோடி செலவில் தயாரான இந்தப் படம் 90 கோடியை மட்டுமே வசூலித்தது. அடுத்தடுத்த இரண்டு படங்களால் கடும் நஷ்டத்திற்கு ஆளானது பூஜா என்டர்டெயின்மென்ட்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜாக்கி பக்னானி. இவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர். ஜாக்கியின் அப்பா வாசு பக்னானி 1995ம் ஆண்டு பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். தொடர் நஷ்டங்களால் மும்பையில் அவர்களுக்குச் சொந்தமான 7 அடுக்கு மாடி அலுவலகத்தை விற்றுள்ளனர். அதோடு அவர்களிடம் வேலை பார்த்த ஊழியர்களில் சுமார் 80 சதவீதம் பேரை வேலையை விட்டு அனுப்பியுள்ளனர்.
பாலிவுட்டின் முக்கிய நிறுவனம் ஒன்று இப்படி ஒரு சிக்கலில் சிக்கியிருப்பது திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.