ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

ஹிந்தித் திரையுலகத்தில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பூஜா என்டர்டெயின்மென்ட். அந்நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. ஆனால், அவர்கள் கடைசியாகத் தயாரித்த இரண்டு திரைப்படங்கள் பெரும் நஷ்டத்தைக் கொடுத்தன.
டைகர் ஷெராப், அமிதாப்பச்சன், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த படம் 'கண்பத்'. சுமார் 190 கோடி செலவில் தயாரான இந்தப் படம் வெறும் 13 கோடியை மட்டுமே வசூலித்தது. அடுத்து அக்ஷய்குமார், டைகர் ஷெராப், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்து ஏப்ரலில் வெளிவந்த படம் 'படே மியான் சோட்டோ மியான்'. சுமார் 350 கோடி செலவில் தயாரான இந்தப் படம் 90 கோடியை மட்டுமே வசூலித்தது. அடுத்தடுத்த இரண்டு படங்களால் கடும் நஷ்டத்திற்கு ஆளானது பூஜா என்டர்டெயின்மென்ட்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜாக்கி பக்னானி. இவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர். ஜாக்கியின் அப்பா வாசு பக்னானி 1995ம் ஆண்டு பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். தொடர் நஷ்டங்களால் மும்பையில் அவர்களுக்குச் சொந்தமான 7 அடுக்கு மாடி அலுவலகத்தை விற்றுள்ளனர். அதோடு அவர்களிடம் வேலை பார்த்த ஊழியர்களில் சுமார் 80 சதவீதம் பேரை வேலையை விட்டு அனுப்பியுள்ளனர்.
பாலிவுட்டின் முக்கிய நிறுவனம் ஒன்று இப்படி ஒரு சிக்கலில் சிக்கியிருப்பது திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.