கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
ஹிந்தித் திரையுலகத்தில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பூஜா என்டர்டெயின்மென்ட். அந்நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. ஆனால், அவர்கள் கடைசியாகத் தயாரித்த இரண்டு திரைப்படங்கள் பெரும் நஷ்டத்தைக் கொடுத்தன.
டைகர் ஷெராப், அமிதாப்பச்சன், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த படம் 'கண்பத்'. சுமார் 190 கோடி செலவில் தயாரான இந்தப் படம் வெறும் 13 கோடியை மட்டுமே வசூலித்தது. அடுத்து அக்ஷய்குமார், டைகர் ஷெராப், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்து ஏப்ரலில் வெளிவந்த படம் 'படே மியான் சோட்டோ மியான்'. சுமார் 350 கோடி செலவில் தயாரான இந்தப் படம் 90 கோடியை மட்டுமே வசூலித்தது. அடுத்தடுத்த இரண்டு படங்களால் கடும் நஷ்டத்திற்கு ஆளானது பூஜா என்டர்டெயின்மென்ட்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜாக்கி பக்னானி. இவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர். ஜாக்கியின் அப்பா வாசு பக்னானி 1995ம் ஆண்டு பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். தொடர் நஷ்டங்களால் மும்பையில் அவர்களுக்குச் சொந்தமான 7 அடுக்கு மாடி அலுவலகத்தை விற்றுள்ளனர். அதோடு அவர்களிடம் வேலை பார்த்த ஊழியர்களில் சுமார் 80 சதவீதம் பேரை வேலையை விட்டு அனுப்பியுள்ளனர்.
பாலிவுட்டின் முக்கிய நிறுவனம் ஒன்று இப்படி ஒரு சிக்கலில் சிக்கியிருப்பது திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.