என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 30ம் தேதி தேர்தல் நடக்கிறது.
கடந்த இரண்டு முறை தலைவராக இருந்த மோகன்லால் பணிச்சுமை காரணமாக இந்த முறை அவர் அவர், மீண்டும் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் வெளியாயின. இதனால் நடிகர்கள், குக்கு பரமேஸ்வரன், அனூப் சந்திரன், ஜெயன் செர்தாலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நடிகர் சங்கக் கூட்டத்தில் மோகன்லால், ஒருமனதாகத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அந்தப் பதவிக்குப் போட்டியிட இருந்தவர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.