மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் |

சென்னை : நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் ஒருவனை சாகசம் செய்ய வைக்க நினைத்து அவர் கையில் தீ பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி, அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் அவர் களம் காண உள்ளார். இன்று(ஜூன் 22) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதையும் மீறி சிலர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை, நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சிறுவன் ஒருவன், நெருப்பில் எரியும் ஓடுகளை உடைக்கும் சாகசம் நடத்தப்பட்டது. அப்போது சிறுவன் கையில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை பற்ற வைத்தனர். ஓடுகளை உடைத்த பின்னரும் சிறுவன் கையில் பற்றிய தீ அணையாததால் அவர் வலியால் அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் சிறுவனுக்கும், அவர் அருகில் இருந்த விஜய் கட்சியின் நிர்வாகி ஒருவருக்கும் லேசான தீ காயம் ஏற்பட்டது.
விஜய்யே பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் அதை கேட்காத அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் நெருப்பை பற்ற வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளன.