அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என இதுவரை விஜய்யுடன் இணைந்து நடித்திராத பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ என்கிற தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை தன்னுடைய மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் விஜய் மில்டன் முயற்சித்து, விஜயகாந்தின் உடல் நல குறைவு காரணமாக அது நடக்காமல் போனது. ஆனால் வெங்கட் பிரபு இதை ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் சாதித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்கும் காட்சிகள் ஒரு நிமிடம் இடம் பெறுகின்றன என்கிற தகவலை அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும் கதைக்கு திருப்பமான ஒரு கதாபாத்திரமாக அது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் விஜய்யின் இரண்டாவது படமான செந்தூரப்பாண்டியில் அவருடன் இணைந்து நடித்த விஜயகாந்த், தற்போது விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமான இதில் இடம் பெற்றுள்ளார் என்பதும் ஆச்சரியமான விஷயம் தான்.