‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சுந்தர் சி இயக்கம், நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் ‛அரண்மனை 4'. தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப்படம் வரவேற்பை பெற்றதோடு ரூ.100 கோடி வசூலையும் அள்ளியது. இந்த படத்தில் இரு நாயகிகள் என்பதால் படப்பிடிப்பில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டதாக தகவல் பரவியது.
இதுபற்றி தமன்னா கூறுகையில், ‛‛பொதுவாகவே ஒரு படத்தில் இரு நாயகிகள் என்றால் இதுபோன்று ஒப்பிட்டு பேசுவதும், போட்டி என்று கூறுவதும் வழக்கமே. என்னை பொறுத்தமட்டில் நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். அதேசமயம் இது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். போட்டியிருந்தாலும் நாம் நாமாகவே நடித்தால் போதுமானது. அரண்மனை 4 படத்தில் வரும் அச்சோ அச்சோ பாடலில் நானும், ராஷி கண்ணாவும் போட்டி போட்டு ஆடினாலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தோம். இது போன்ற ஆரோக்கியமான போட்டியிருந்தால் நல்லது'' என்கிறார்.