வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: முத்துராமலிங்க தேவராக நடித்த நடிகர் புகார் | தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் | மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம் | மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜா | பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம் | ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம் | 7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல் | 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' |

சுந்தர் சி இயக்கம், நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் ‛அரண்மனை 4'. தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப்படம் வரவேற்பை பெற்றதோடு ரூ.100 கோடி வசூலையும் அள்ளியது. இந்த படத்தில் இரு நாயகிகள் என்பதால் படப்பிடிப்பில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டதாக தகவல் பரவியது.
இதுபற்றி தமன்னா கூறுகையில், ‛‛பொதுவாகவே ஒரு படத்தில் இரு நாயகிகள் என்றால் இதுபோன்று ஒப்பிட்டு பேசுவதும், போட்டி என்று கூறுவதும் வழக்கமே. என்னை பொறுத்தமட்டில் நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். அதேசமயம் இது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். போட்டியிருந்தாலும் நாம் நாமாகவே நடித்தால் போதுமானது. அரண்மனை 4 படத்தில் வரும் அச்சோ அச்சோ பாடலில் நானும், ராஷி கண்ணாவும் போட்டி போட்டு ஆடினாலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தோம். இது போன்ற ஆரோக்கியமான போட்டியிருந்தால் நல்லது'' என்கிறார்.