ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில் | ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது | சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன? | கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்? | கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் | அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி | வில்லன் ரோலை விரும்பும் கமல் | கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா |
கடந்த மாதத்தில் அஜித்தின் குட் பேக் அக்லி படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றபோது அருகில் உள்ள ஸ்டுடியோவில் சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படப்பிடிப்பு நடைபெற்றது. இதை அறிந்த அஜித்குமார் அங்கு சென்று சிரஞ்சீவியை சந்தித்து நலம் விசாரித்தார். அது குறித்த புகைப்படங்கள் அப்போது வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அஜித்தின் மனைவியான ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாம்லி அவர்களது சகோதரர் ரிச்சர்ட் ஆகிய மூன்று பேரும் சிரஞ்சீவியை நேரில் சந்தித்துள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஷாம்லி.
சிரஞ்சீவி - ஸ்ரீதேவி இணைந்து நடித்த ஜெகடேகா வீருது அதிலோக சுந்தரி என்ற தெலுங்கு படத்தில் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக தாங்கள் நடித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதோடு, சிரஞ்சீவி சாரின் அன்பு என்றும் மாறாதது என்றும் ஷாம்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.