சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் மாண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். அதில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை வீழ்த்தி, 52.9 சதவீத ஓட்டுகளுடன் முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற்று எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், டில்லிக்கு செல்வதற்காக சண்டிகர் விமான நிலையம் வந்த கங்கனா ரணாவத்தை, விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். விவசாயிகள் குறித்து கங்கனா ஏதோ கருத்து தெரிவித்ததாகவும், இதனால் பெண் காவலாளி கோபமடைந்து கங்கனா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் புகார் அளித்துள்ளதோடு, சிஐஎஸ்எப் பெண் காவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கங்கனாவை அறைந்தவரின் பெயர் குல்விந்தர் கவுர் என்று கூறப்படுகிறது. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ள கங்கனா ரணாவத்தை அறைந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.