2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

‛வேட்டையன்' படத்தை முடித்துவிட்டு துபாய்க்கு சென்ற ரஜினி, கடந்தவாரம் சென்னை திரும்பினார். பின்னர் மறுநாளே இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். கடந்த சில நாட்களாக இமயமலையில் எப்பவும் தான் சென்று வரும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற ரஜினி இன்று(ஜூன் 5) மாலை சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் : ‛‛தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக எனது அருமை நண்பர், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். அதேப்போல் எனது நண்பர் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். மத்தியில் பா.ஜ. கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக உள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். இமயமலை பயணம் சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு முறையும் புதுவித அனுபவம் கிடைக்கிறது'' என்றார் ரஜினி.