ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படத்தின் புதிய அப்டேட் | பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? | 2050ல் நடக்கும் கதையா 'தி கோட்'? | 50வது நாளில் 'அரண்மனை 4' | விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இபிஎஸ், கமல் | நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் அலட்சியம் : சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் தீ பற்றியதால் அதிர்ச்சி | விஜய் 69 - தெலுங்கு தயாரிப்பாளர் தான் என்பது உறுதி | ராம்சரணின் புதிய படம் குறித்து அப்டேட் தகவல்களை கொடுத்த விஜய்சேதுபதி | ஆஷிகாவை பெண்களே காதலிப்பார்கள் : இயக்குனர் கணிப்பு | பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிறது முருகன் பக்தி படம் |
‛வேட்டையன்' படத்தை முடித்துவிட்டு துபாய்க்கு சென்ற ரஜினி, கடந்தவாரம் சென்னை திரும்பினார். பின்னர் மறுநாளே இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். கடந்த சில நாட்களாக இமயமலையில் எப்பவும் தான் சென்று வரும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற ரஜினி இன்று(ஜூன் 5) மாலை சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் : ‛‛தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக எனது அருமை நண்பர், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். அதேப்போல் எனது நண்பர் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். மத்தியில் பா.ஜ. கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக உள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். இமயமலை பயணம் சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு முறையும் புதுவித அனுபவம் கிடைக்கிறது'' என்றார் ரஜினி.