'இந்தியன் 2'வில் ரஜினி குறித்து விமர்சனமா? - கமல் பதில் | வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் மெஹ்ரின் | சல்மான்கானை கொல்ல சிறையில் நடந்த சதி: குற்றப்பத்திரிகையில் தகவல் | நிகிலுடன் இணைந்த சாயி மஞ்ரேக்கர் | மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் : அஜித் அவசரமாக சென்னை திரும்பியது இதற்காக தான்....! | மிர்சாபூர் ரசிகர்கள் மாஸ் மற்றும் கிளாஸ் ஆனவர்கள் : பங்கஜ் திரிபாதி பெருமிதம் | சம்பளம் வேண்டாம் : துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு | ஜென் Z இளைஞர்களை கவர வருகிறது ‛பிரைம் டைம் வித் தி மூர்த்திஸ்' ஓடிடி தொடர் | ராமாயணப் பின்னணியில் ராஜமவுலி, மகேஷ் பாபு படம்? | விஜய் சேதுபதி ஜோடியாக நித்யா மேனன்? |
அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'அஞ்சாமை'. இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மருத்துவத் தேர்வு கல்வி முறையில் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகி இருக்கும் படம்.
வருகிற 7ம் தேதி வெளிவரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். படம் குறித்து வாணி போஜன் கூறியதாவது: இந்த படம் நாட்டில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசுகிறது. இந்த படம் தொடங்கியதில் இருந்து இன்று வரை இந்த படத்தின் மீது பெரிய மரியாதை இருக்கிறது. இதில் நான் நடித்ததை என்னென்றைக்கும் பெருமையாக சொல்லிக் கொள்வேன். என்றார்.
எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் வாணி போஜன். அழகு, திறமை இருந்தபோதும் அவரால் முன்னணி இடத்திற்கு இன்னும் வரமுடியவில்லை. தொடர்ந்து அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது
“எந்த பின்புலமும் இல்லாமல் இருந்து இந்த இடத்திற்கு நான் வந்திருப்பதே பெரிய விஷயம்தான். நீங்கள் குறிப்பிடும் முன்னணி இடமெல்லாம் எனக்கு தேவையில்லை. நல்ல நடிகை என்ற பெயர் மட்டும் போதும். வாரிசு நடிகைகள் என்றால் நிச்சயமாக அவங்களுடைய அறிமுகம் பெரியதாக இருக்கும். ஆதரவளிக்க ஒரு நான்கு பெரிய நடிகர்கள் வருவார்கள். அடுத்தடுத்த படங்கள் குவிகிறது. அது எல்லாம் தவிர்க்க முடியாதவை. ஆனால் நிலைத்து நிற்க அவர்கள் போராடித்தான் ஆக வேண்டும்.
வாரிசு என்பது எல்லா துறைகளிலும் உள்ள விஷயம்தான். சினிமா துறையிலும் அப்படித்தான். என்னை மாதிரி நிறையப் பெண்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும். நல்ல நடிகைகளைப் பார்க்கும்போது, இந்த நடிகைக்கு எப்போது அந்தப் பெரிய அறிமுகம் கிடைக்கும் என்று தோன்றும். ஆனால் மக்கள் உண்மையாக இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. குறிப்பிட்ட நடிகை, யாராக இருந்தாலும் திறமை இருந்தால் அவர்களை வரவேற்பார்கள். இல்லாவிட்டால் நிராகரிப்பார்கள். பிரபலங்களின் குடும்பத்திலிருந்து வந்ததால், அவர்களுக்கு அதிக வரவேற்பையும் அறிமுக நடிகைகளுக்கு குறைவான வரவேற்பையும் கொடுப்பதில்லை. அதனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்றார்.