நடிகர் ஜெய்சங்கர் பெயரிலான சாலை திறப்பு | பாரம்பரியமிக்க ஏவிஎம் தியேட்டர் இடிப்பு | சினிமா கைவிட்டால் படிப்பை வைத்து பிழைத்துக் கொள்வேன்: சிவகார்த்திகேயன் | சினிமா நடிகைகளுக்கு சவாலாக களமிறங்கும் ஏஐ அழகிகள் : ஏஐ.,யில் உருவான இசை ஆல்பம் வைரல் | ஏஐ தொழில்நுட்பத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சன்னி லியோன் | எனது அந்த இரண்டு படங்களை ஜனாதிபதி குறிப்பிட்டது ஏன் : மோகன்லால் விளக்கம் | 60 புதுமுக நடிகர்களுடன் பிரித்விராஜ் நடிக்கும் சந்தோஷ் டிராபி | கூலியில் ஏற்பட்ட மனக்குறை : ரெபோ மோனிகா ஜான் ஆதங்கம் | 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரிஜினல் கிளைமாக்ஸ் உடன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஷோலே | 'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! |
விதார்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'மருதம்'. கஜேந்திரன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். மார்கழி திங்கள் படத்தில் அறிமுகமான ரக்ஷனா நாயகியாக நடித்துள்ளார். அருள்தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, 'தினந்தோறும்' நாகராஜ், மாத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். என்.ஆர்.ரகுந்தன் இசை அமைக்கிறார். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி விதார்த் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக 'மருதம்' இருக்கும். ராணிப்பேட்டைப் பகுதியை மையப்படுத்திய கதை. அதனால மொத்தப் படப்பிடிப்பும் அங்கேதான் நடந்தது.
தங்குவதற்கு ஒரு நல்ல இடவசதிகூட கிடையாது. வாகனங்கள் செல்ல முடியாத ஏரியாக்களும் உண்டு. கேரவன் வசதிகூட இருக்காது. கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பகுதி விவசாயிகள் படும் துன்பத்தை விட இதுஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
இந்தக் கதையில் விவசாயியாக நடித்தேன். தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த பிறகு அதிலிருந்து மீண்டு வர முடிந்ததா என்பதுதான் கதை. வலிகள் நிறைந்த கதை. விவசாயிகளுக்கு ஏற்படும் எத்தனையோ பிரச்னைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதுவரை பேசப்படாத ஒரு புதிய பிரச்னையாக இருக்கும். நிறைய விவாதங்களை ஏற்படுத்தும். என்றார்.