இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் |

விதார்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'மருதம்'. கஜேந்திரன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். மார்கழி திங்கள் படத்தில் அறிமுகமான ரக்ஷனா நாயகியாக நடித்துள்ளார். அருள்தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, 'தினந்தோறும்' நாகராஜ், மாத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். என்.ஆர்.ரகுந்தன் இசை அமைக்கிறார். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி விதார்த் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக 'மருதம்' இருக்கும். ராணிப்பேட்டைப் பகுதியை மையப்படுத்திய கதை. அதனால மொத்தப் படப்பிடிப்பும் அங்கேதான் நடந்தது.
தங்குவதற்கு ஒரு நல்ல இடவசதிகூட கிடையாது. வாகனங்கள் செல்ல முடியாத ஏரியாக்களும் உண்டு. கேரவன் வசதிகூட இருக்காது. கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பகுதி விவசாயிகள் படும் துன்பத்தை விட இதுஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
இந்தக் கதையில் விவசாயியாக நடித்தேன். தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த பிறகு அதிலிருந்து மீண்டு வர முடிந்ததா என்பதுதான் கதை. வலிகள் நிறைந்த கதை. விவசாயிகளுக்கு ஏற்படும் எத்தனையோ பிரச்னைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதுவரை பேசப்படாத ஒரு புதிய பிரச்னையாக இருக்கும். நிறைய விவாதங்களை ஏற்படுத்தும். என்றார்.




