ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் |

பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் தமிழில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து இங்குள்ள ரசிகர்களிடமும் பிரபலமானவர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு 2022ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் 2 படத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது ஹிந்தியில் வெல்கம் டு தி ஜங்கிள் மற்றும் குட்சடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இருதினங்களுக்கு முன் ரவீணாவின் கார் இரவு சாலையில் சென்ற மூன்று பெண்களின் மீது மோதியதாகவும் இதில் காயமடைந்த பெண்கள் வண்டியை ஓட்டிய டிரைவர் மற்றும் அதன்பிறகு சமாதானப்படுத்த இறங்கிய ரவீணா டாண்டன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் ஒரு கட்டத்தில் ரவீணாவை தாக்கவும் செய்தனர்.
இது குறித்து சில வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதில் ரவீணாவின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சம்பவம் நடந்த மும்பை கார்ட்டர் ரோடு பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் டிசிபி ராஜ் திலக் ரோஷன் இது குறித்து கூறும்போது, “ரவீணாவின் கார் யார் மீதும் மோதவில்லை. அதனால் யாரும் காயமடையவும் இல்லை. ஓட்டுநர் காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது பின்பக்கம் இருந்த பெண் தன்னை இடிப்பது போல் வந்ததால் கத்தி கூச்சலிட்டு டிரைவரை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை சமாதானப்படுத்த இறங்கிய ரவீணா டாண்டனையும் அவர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் எந்தவித புகாரும் எங்களுக்கு வரவில்லை. ரவீணாவின் கார் பெண்கள் மீது மோதி விட்டது என்கிற தவறான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.