இந்தியன்-2வில் கமலுடன் நடித்த அனுபவம்! - எஸ்.ஜே.சூர்யா தகவல் | இரண்டாவது நாளில் 298.5 கோடி வசூலித்த கல்கி 2898 ஏடி | சுந்தர். சியின் ‛ஒன் டூ ஒன்' படத்தின் டிரைலர் வெளியானது! | சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? | ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளில் வெளியான புதிய பட அறிவிப்பு! | ஒரு தாய் மக்கள், அருந்ததி, ஜில்லா: ஞாயிறு திரைப்படங்கள் | விஜய் - த்ரிஷா, எம்ஜிஆர் - ஜெயலலிதா : ஒப்பிட்டு பேசி சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா | விஸ்வரூபம் மற்றும் விக்ரம் படங்களில் மகாபாரத பாதிப்பு உண்டு : கமல் புதிய தகவல் | கல்கியில் வரவேற்பை பெற்ற பஹத் பாசில் ஆவேசம் வசனம் | குருவாயூர் கோவிலில் இனிதே நடந்த மீரா நந்தன் திருமணம் |
இந்திய சினிமாவின் இளம் பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள மொழி அனைத்திலும் பாடி உள்ள ஸ்ரேயா ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளிலும் பாடி உள்ளார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தற்போது ஒரே பாடலை 6 மொழிகளில் அவரே பாடி உள்ளார்.
புஷ்பா படத்தில் இடம்பெறும் 'சூசெகி' என்ற பாடலை, 'அன்காரூன்' என ஹிந்தியிலும், 'சூடான' என தமிழிலும், 'கண்டாலோ' என்று மலையாளத்திலும், 'நொடோகா' என கன்னடத்திலும் 'ஆகுன்னர்' என பெங்காலியிலும் பாடி உள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடலை எழுதி உள்ளனர்.
புஷ்பாவின் முதல் பாகத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடலை நான்கு பாடகிகள் பாடினர். இந்த பாகத்தில் அதுபோன்ற ஒரு பாடலை ஸ்ரேயாவே பாடி உள்ளார்.