கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
இந்திய சினிமாவின் இளம் பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள மொழி அனைத்திலும் பாடி உள்ள ஸ்ரேயா ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளிலும் பாடி உள்ளார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தற்போது ஒரே பாடலை 6 மொழிகளில் அவரே பாடி உள்ளார்.
புஷ்பா படத்தில் இடம்பெறும் 'சூசெகி' என்ற பாடலை, 'அன்காரூன்' என ஹிந்தியிலும், 'சூடான' என தமிழிலும், 'கண்டாலோ' என்று மலையாளத்திலும், 'நொடோகா' என கன்னடத்திலும் 'ஆகுன்னர்' என பெங்காலியிலும் பாடி உள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடலை எழுதி உள்ளனர்.
புஷ்பாவின் முதல் பாகத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடலை நான்கு பாடகிகள் பாடினர். இந்த பாகத்தில் அதுபோன்ற ஒரு பாடலை ஸ்ரேயாவே பாடி உள்ளார்.