பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? | நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பாரா? மேல் முறையீடு செய்வாரா விஷால்? | நடிப்பா? தயாரிப்பா?: யோசனையில் ரம்பா | மம்பட்டியான் பாடல் காப்பிரைட் : நடிகர் தியாகராஜன் பெருந்தன்மை | தருமபுரி அருகே கார் விபத்து : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ காயம், தந்தை பரிதாப பலி |
இந்திய சினிமாவின் இளம் பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள மொழி அனைத்திலும் பாடி உள்ள ஸ்ரேயா ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளிலும் பாடி உள்ளார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தற்போது ஒரே பாடலை 6 மொழிகளில் அவரே பாடி உள்ளார்.
புஷ்பா படத்தில் இடம்பெறும் 'சூசெகி' என்ற பாடலை, 'அன்காரூன்' என ஹிந்தியிலும், 'சூடான' என தமிழிலும், 'கண்டாலோ' என்று மலையாளத்திலும், 'நொடோகா' என கன்னடத்திலும் 'ஆகுன்னர்' என பெங்காலியிலும் பாடி உள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் பாடலை எழுதி உள்ளனர்.
புஷ்பாவின் முதல் பாகத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடலை நான்கு பாடகிகள் பாடினர். இந்த பாகத்தில் அதுபோன்ற ஒரு பாடலை ஸ்ரேயாவே பாடி உள்ளார்.