20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முக்கிய நகைச்சுவை நடிகர்கள் அனைவருமே கதாநாயகர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும், சிலர் இன்னும் தங்களை கதையின் நாயகன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோர் கதையின் நாயகர்களாக மாறிவிட்டார்கள். சந்தானம், யோகி பாபு சில படங்களில் கதாநாயகர்களாக நடித்துவிட்டார்கள். சூரி இப்போதுதான் இரண்டாவது படத்திற்கு வந்திருக்கிறார்.
அவர் கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த 'விடுதலை' படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்' படம் நாளை மறுதினம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. போட்டிக்கு வேறு முக்கிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் 'கருடன்' படத்திற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.
படம் நன்றாக அமைந்துவிட்டால் மீண்டும் ஒரு வெற்றியைப் பறித்து நாயகனாகவும் பறக்க ஆரம்பித்துவிடுவார் சூரி.