'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு | புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள் | பிளாஷ்பேக் : விமர்சகர்கள் கிழித்து தொங்க விட்டபோதும் மக்கள் வசூலை அள்ளி கொடுத்த படம் | ஒரே படத்திற்கு ரஜினியின் 3 பட டைட்டில் | ஏஐ தொழில்நுட்பத்தில் இளமையான ஜாக்கிசான் படம் : தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : சமூக கதைகளில் நடிக்க மறுத்த நடிகர் | சித்ரா தற்கொலை வழக்கில் மேல்முறையீடு | தி கோட் Vs லப்பர் பந்து - விஜயகாந்த்தைப் பெருமைப்படுத்தியது எந்தப் படம் ?, | தேவரா - தனித்து முதல் வசூல் சாதனையை படைத்த ஜுனியர் என்டிஆர் | சின்னத்திரையில் ஒரு சினிமா முயற்சி : நெஞ்சத்தைக் கிள்ளாதே அப்டேட் |
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முக்கிய நகைச்சுவை நடிகர்கள் அனைவருமே கதாநாயகர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும், சிலர் இன்னும் தங்களை கதையின் நாயகன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோர் கதையின் நாயகர்களாக மாறிவிட்டார்கள். சந்தானம், யோகி பாபு சில படங்களில் கதாநாயகர்களாக நடித்துவிட்டார்கள். சூரி இப்போதுதான் இரண்டாவது படத்திற்கு வந்திருக்கிறார்.
அவர் கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த 'விடுதலை' படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்' படம் நாளை மறுதினம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. போட்டிக்கு வேறு முக்கிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் 'கருடன்' படத்திற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.
படம் நன்றாக அமைந்துவிட்டால் மீண்டும் ஒரு வெற்றியைப் பறித்து நாயகனாகவும் பறக்க ஆரம்பித்துவிடுவார் சூரி.