மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமைகளுக்கான வியாபாரம் ஆரம்பமாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு மிக அதிக விலையை சொல்கிறதாம். ஆனால், வினியோகஸ்தர்கள் அவ்வளவு விலையைக் கொடுக்கத் தயாராக இல்லையாம். அதேசமயம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அட்வான்ஸ் தொகையாகத் தருகிறோம். ஆனால், அதை என்ஆர்ஏ அடிப்படையில் தர மாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்களாம்.
புஷ்பா முதல் பாகத்திலேயே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறினார்களாம். இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் வினியோகஸ்தர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.