விரைவில் தமிழ் சினிமா ஸ்டிரைக்...? | கல்கியின் அன்னா பென் கதாபாத்திர போஸ்டர் வெளியானது | விஜய்சேதுபதியின் ரசிகராகவே மாறிப்போன ஜோஜூ ஜார்ஜ் | கருடன் வெற்றி : உன்னி முகுந்தனை தேடி வந்த பொருளாளர் பதவி | அமெரிக்காவில் 210 ஐமேக்ஸ் தியேட்டர்களில் 'கல்கி 2898 ஏடி' | பின் வாங்கிய கமல் ? - சிம்பு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… | அப்பாடா! ஒரு வழியாக இரு ‛‛போராளி'' நடிகர்கள் வாய் திறந்தனர் : முதல்வர் பெயரை குறிப்பிடாமல் சூர்யா கண்டனம் | 'லியோ'வை விட குறைவான விலையில் 'தி கோட்' ? | இவானா வருண் நடிக்கும் 'ராஞ்சா' | புதுமுகங்கள் உருவாக்கும் படத்திற்கு தனது பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'சலார்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடனடியாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. இதனிடையே, கடந்த சில வாரங்களாக இப்படம் டிராப் செய்யப்பட்டதாகத் தகவல் வந்து கொண்டிருந்தது. பிரசாந்த் நீல், பிரபாஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்றார்கள்.
இந்த செய்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சற்று முன் பிரசாந்த், பிரபாஸ் 'சலார்' படப்பிடிப்புத் தளத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “அவர்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் 'சலார் 2' படப்பிடிப்பு நிச்சயம் ஆரம்பமாகும் என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார்கள். ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டே 'சலார் 2' படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குவார் எனத் தெரிகிறது.