விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

கன்னட திரை உலகில் கதாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் இயக்குனர் ராஜ் பி.ஷெட்டி. பெரும்பாலும் மலையாள  திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டவர்.  சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள டர்போ திரைப்படத்தில் மெயின் வில்லன் ஆக நடித்துள்ளார் ராஜ் பி.ஷெட்டி. புலி முருகன் பட இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதைப்படி ராஜ் பி.ஷெட்டி தமிழகத்தை சேர்ந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் வசனம் பேச வேண்டிய சூழல் இருந்தது. தமிழில் பேசுவதற்கு ரொம்பவே தடுமாறி உள்ளார் ராஜ் பி.ஷெட்டி. அதே சமயம் மலையாளத்தில் அவர் சரளமாக பேசியதை பார்த்த இயக்குனர் வைசாக் உடனடியாக அவரது கதாபாத்திரத்தை மலையாளியாக மாற்றி மலையாளத்தில் வசனங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவற்றை ஒரே டேக்கில் பேசி ஆச்சரியப்படுத்தினாராம் ராஜ் பி.ஷெட்டி.