சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

கன்னட திரை உலகில் கதாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் இயக்குனர் ராஜ் பி.ஷெட்டி. பெரும்பாலும் மலையாள திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள டர்போ திரைப்படத்தில் மெயின் வில்லன் ஆக நடித்துள்ளார் ராஜ் பி.ஷெட்டி. புலி முருகன் பட இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதைப்படி ராஜ் பி.ஷெட்டி தமிழகத்தை சேர்ந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் வசனம் பேச வேண்டிய சூழல் இருந்தது. தமிழில் பேசுவதற்கு ரொம்பவே தடுமாறி உள்ளார் ராஜ் பி.ஷெட்டி. அதே சமயம் மலையாளத்தில் அவர் சரளமாக பேசியதை பார்த்த இயக்குனர் வைசாக் உடனடியாக அவரது கதாபாத்திரத்தை மலையாளியாக மாற்றி மலையாளத்தில் வசனங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவற்றை ஒரே டேக்கில் பேசி ஆச்சரியப்படுத்தினாராம் ராஜ் பி.ஷெட்டி.