ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு |
பெங்களூருவில் கடந்த வாரம் மே 20ம் தேதி போதை பார்ட்டி ஒன்று நடைபெற்றது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடத்தியது தெரிய வந்தது. அது தொடர்பாக சிலரை கைது செய்தனர்.
தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், மாடல்கள் உள்ளிட்ட சில பிரபலங்கள் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். தெலுங்கு நடிகை ஹேமா, நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஜானி ஆகியோரது பெயர்கள் அதில் அடிபட்டன. ஸ்ரீகாந்த், ஜானி, ஹேமா ஆகியோர் உடனடியாக மறுப்பு அறிக்கையை வெளியிட்டனர்.
இந்நிலையில் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட 73 ஆண்கள் மற்றும் 30 பெண்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் மீதும் வழக்கு பாயும் எனத் தெரிகிறது.
போதை பார்ட்டி நடந்த இடத்திலிருந்து 14.4 கிராம் எம்டிஎம்எ போதை மாத்திரைகள், 1.16 கிராம் எம்டிஎம்எ படிகங்கள், 6 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 5 கிராம் கோக்கைன், கோக்கைன் தடவப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள், 5 மொபைல் போன்கள், ஒரு வோக்ஸ்வோகன் கார், ஒரு லேண்ட் ரோவர் கார், டிஜே பயன்படுத்தும் ஆடியோ சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.