நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சூர்யாவுக்கு சிறந்த படமாக அமைந்த ஒரு படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கிய அந்தப் படம் 68வது தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகிய விருதுகளை வென்றது.
சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி அவர்களது அடுத்த படமாக 'புறநானூறு' படத்தை அறிவித்தது. ஆனால், படப்பிடிப்புக்கு போகாமல் படத்தைத் தள்ளி வைத்துவிட்டனர். கதையில் சில மாற்றங்களை சூர்யா செய்யச் சொன்னதாகவும் கோலிவுட்டில் பேசிக் கொண்டார்கள்.
இதனிடையே, தற்போது படத்தை டிராப் செய்யும் முடிவுக்கே வந்துவிட்டார்களாம். 1965ல் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாக வைத்துதான் இந்தப் படத்தின் கதையை எழுதியிருந்தாராம் சுதா. தற்போது சென்னையை விட்டுவிட்டு மும்பையில் குடியேறிவிட்டார் இப்படத்தின் நாயகன் சூர்யா. ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டுமென்பதற்காகத்தான் அவர் இப்படி வீடு மாறியுள்ளார். இந்த சமயத்தில் ஹிந்தி எதிர்ப்புப் படத்தில் நடித்தால் ஹிந்திப் படங்களில் நடிப்பது சரியாக இருக்காது என்ற கருத்து அவரிடம் முன்வைக்கப்பட்டதாம்.
எனவே, படத்தின் கதையை ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதிலிருந்து மாற்றச் சொன்னாராம் சூர்யா. ஆனால், படத்தின் கருவே அதுதான், அதை மாற்ற முடியாது என சுதா கண்டிப்புடன் மறுத்துவிட்டாராம். எனவே, இந்தக் கதையை டிராப் செய்துவிட்டு வேறு கதையுடன் வந்தால் நடித்துத் தருகிறேன் என சூர்யா தரப்பில் சுதாவிடம் சொன்னார்களாம். அதற்கு சுதா சம்மதிப்பாரா மாட்டாரா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார்கள்.