சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிக்கும் மிக முக்கிய பங்கு அதன் கதை மற்றும் கதாசிரியருக்கு உண்டு. மலையாளத்தில் கதாசிரியர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. படங்களின் டைட்டில் கார்டில் கதாசிரியர்களின் பெயர் வரும்போது ரசிகர்கள் கைதட்டி விசில் அடிக்கும் நிகழ்வுகளும் அங்கே நடக்கின்றன. இப்படி கதாசிரியர்களுக்கான முக்கியத்துவம் வெறும் அங்கீகாரமாக மட்டும் இல்லாமல் இயக்குனர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு கதாசிரியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் இயக்குனரும் கதாசிரியருமான மிதுன் மானுவேல் தாமஸ்.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குனரான மிதுன் மானுவேல் தாமஸ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான அஞ்சாம் பாதிரா என்கிற சைக்கோ திரில்லர் வெற்றி படத்தை கொடுத்தவர். இயக்குனராக இருந்து கொண்டே சில படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.. அந்த வகையில் தற்போது புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள டர்போ படத்திற்கும் இவர்தான் கதை எழுதியுள்ளார்.
வரும் வாரம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த படம் குறித்து பேட்டி அளித்தபோது, “ஒரு படத்திற்கு கதை தான் ஆணிவேர். கதை சரியில்லை என்றால் மொத்த படமும் தோல்வியை தழுவும். கதையினால் தான் ஒரு படம் வெற்றி பெறுகிறது. அதனால் ஒரு இயக்குனருக்கு சமமான சம்பளம் கதாசிரியருக்கும் கொடுக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார் மிதுன் மானுவேல் தாமஸ்.